உள்ளம் உறைந்திடுமோ

காற்றுத்தொடாத இலை,
கவலையோடு உறைந்திருக்க,
அலை தழுவாத கடல்,
அசைவின்றி அமர்ந்திருக்க,
என் உடலும் உறைந்திருக்கிறது - ஆனால்
எண்ணம் நிலவும் மனமோ ,,,,,,,
புயல் மழையின் இரைச்சல் போலும்,
போர் நடக்கும் இடத்தை போலும்,
ஈர்பிளந்த புவிப்பொழும்,
இரைக்கண்ட பறவைகள் போலும்,
கலவரம் கொண்டுள்ளது !
காரணம் அறியவில்லை,
கண்களும் உறங்கவில்லை,
காண்பவர் கற்சிலை என்பர்,
கன்னி மனமோ நெருப்பினில் கொதிக்க !
உடல் உறைந்திருக்கும்,
உயிர் நினைவுகளில் நீர் இருக்க,
உள்ளம் உறைந்திடுமோ ?