வார்த்தை தவறி விட்டாய்

வார்த்தை தவறி விட்டாய்

அன்று நீ
என் கழுத்தில் மாலையிட்டு
உடலாலும் உள்ளத்தாலும்
இருவர் அல்ல ஒருவர் என்று
சொன்னாயடா.....
இன்றோ
நீ வேறு நான் வேறு என்று
நீ உதித்த வார்த்தையாலே
என் உள்ளமதை நீயே உடைத்தாயடா .....!!

அக்கினி சாட்சியாய்
பெரியோர் பெற்றோர் காட்சியாய்
என் கரம் நீயும் பற்றியே
முதுமையிலும் நம் வாழ்வு
தொடரும் என்றுரைத்தாயடா....
இன்றோ
இன்னொருத்தியுடேனே
என் வாழ்வு என்றுரைத்தே
என் இதயமதை நீயே பிளந்தாயடா......!!

உன்னில் பாதியாய்
உனக்குள் ஒருத்தியாய்
உன் இன்ப துன்பங்களில்
உன் உயிர்த் தோழியாய்
நீ என் மடி சாயும் நேரங்களில்
உனக்கு இன்னொரு தாயாக
உனக்குளேயே வாழ்ந்தவளின்
உயிரை இன்றே
ஓர் நொடியில் நீயே பறித்தாயடா.....!!

உனக்கு பத்தினியாய்
உன் பெற்றோருக்கு புத்திரியாய்
உன் தங்கை தம்பிகளுக்கு
இன்னொரு சகோதரியாய்
நம் உறவில் ஜனித்த
உயிர்களுக்கு தாயாய் மாறி
உனக்குள்ளேயே கலந்தவளுக்கு......

மணநாளில் நீயும்
மாலையிட்ட என் கழுத்தில்
மங்கள நாண் பூட்டி
அக்கினி சாட்சியாய்
ஆண்டவன் காட்சியாய்
உற்றார் பெற்றார் முன்னே
அன்று நீ எனக்களித்த
வாக்குகள் அனைத்தும்
இன்று எங்கே போனதடா.......???

எழுதியவர் : அன்புடன் சகி (6-Aug-16, 11:36 am)
பார்வை : 216

மேலே