காதல் உப்புசம்
தீயாய்
எரிவதும்
தென்றலாய்
குளிர்வதுமாய்
இரு விழிகள்
உரு மாறுவதெப்படி
உனக்கு மட்டும் பெண்ணே?
காதல் உன் கண்ணில்
காந்தல் என் கண்ணில்
சாந்தம் உன் கண்ணில்
பாந்தம் என் கண்ணில்
காதல் யாத்திரை எப்போது முடியும்,
கண்ணில் நித்திரை எப்போது நிறையும்,
மனமெங்கும் மந்திரம்
மறக்காத எந்திரம்
மறுக்கவில்லை நான்
மயங்கவில்லை நீ,
காதல் ஒரு சாளரம்
அடைத்துவிட்டால் உள்ளே ஒரே உப்புசம்..!