​கிடைக்காத சுதந்திரம் ​

எல்லையிலா மகிழ்ச்சியே
கிடைத்திட்ட சுதந்திரத்தால் நமக்கு !
ஆனாலும் கவலையெனக்கு
​கிடைத்திடா சுதந்திரம் சமூகத்தில் !

​சாதிமத ​ ​வெறியிலிருந்து
விடுபடா சமுதாயம் இன்றுவரை !
​உள்ளங்களைப் பிரித்திடும்
​பயனற்ற சமயக் கோட்பாடுகள் !

இணைந்திடும் காதலர்களை
கொன்றிடும் ​சாதீய அரக்கர்கள் !
​அரசியலை வர்த்தகமாக்கி
கோடிகளை ஈட்டும் கொடூரர்கள் !

அடித்தட்டு மக்களுக்கு
எதிராக நிகழும் கொடுமைகள் !
வறுமைக் கோடென்று
கருமையால் உருவான அகழிகள் !

அத்தனையும் நீங்கா சமுதாயமெனில்
கிடைத்தும் கிடைக்காத சுதந்திரமே !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Aug-16, 8:25 am)
பார்வை : 1241

மேலே