சுதந்திரம்
![](https://eluthu.com/images/loading.gif)
பெற்றது இரவென்பதால்
விடியவே இல்லை இன்றும் !
கற்றது நற்பாடமொன்று
பெறாமல் இருப்பின் நல்லதென்று !
போராடினர் பலவிதத்தில்
வாதாடினர் விடுதலைப் பெற்றிட !
மாண்டனர் பல்லாயிரம்
மகிழ்ந்தனர் பலகோடி பெற்றதும் !
வருத்தமுடன் கூறினாலும்
பொருத்தமே என்று புரிந்திடுவீர் !
நல்லவை நடப்பதைவிட
அல்லவை அதிகமென அறிந்திடுவீர் !
எதிர்மறை கவிதையல்ல
நிகழ்கால நிகழ்வுகளின் பாதிப்பே !
நடைமுறை மாறினால்தான்
இறுதிவரை இன்பமுடன் வாழலாம் !
பாடுபட்ட தியாகிகளை வணங்குவோம்
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம !
பழனி குமார்