கவியின் இழப்பு

ஒரு கவி வரலாறே
புதைகுழி புகுகின்றது...
கண்ணீரை தாண்டிய
ஓர் சோகம் - என்
கண்களுக்குள் புதைகின்றது!..

தமிழை உன் திறமையால்
அலங்கரித்த தமிழ் மகனே..
பாதித் தூரத்திலே - உன்
பயணம் முடக்கப்பட்டு,
போகின்றாய் முத்துக்குமரா...

நீ கரம் பற்றிய எழுதுகோல்
கலங்கி தவிக்குது வெறுமையில்...
நீ மட்டும் மீளாப் பயணம்
தொடங்கிவிட்டாய் தனிமையில்...

விதியை நினைக்கையில்
எனக்கு எல்லையற்ற கோபம்...
இடைவழியிலே உனை பறித்தது
அது தமிழுக்கு செய்த பாவம்!..

எழுதியவர் : கவிப் பிரியை - shah (16-Aug-16, 7:36 pm)
Tanglish : kaviyin ezhappu
பார்வை : 585

மேலே