சிறைப்பட்ட வெண்ணிலா

உன்னைப்பார்த்த
நாள் முதலாய்
இந்த உலகம்
மறந்து போச்சு......
காணாத பொழுதெல்லாம்
ரணமான
பொழுதாச்சு.......!!
பிரம்மனின்
எதிரியாய்
இந்த பிரபஞ்சத்தின்
பேரழகியாய்.....பிறந்தவளே
என்னிதயம்
நின்றவளே.....!!
மூக்குத்திச்
சிவப்பில்.....
முல்லைப் பல்
சிரிப்பில்.....
உன் கண்கள்
கொண்ட தவிப்பில்
தவியாய்
தவித்தவன்
இவன் தானே......!!!!?
சண்டையிட்டு
சமரசமாக்கிவிடும்
அந்த
ஒவ்வொரு
முத்தமும்......உயிரின்
உச்சமடி......உண்மையில்
இதுவே
எனக்கு
போதுமடி......!!
விழியெல்லாம்
அந்த
நினைவுதான்
ஓடுகிறது.......
அதனால் தான்
என்னிதயம்
அல்ல.....நம்
இதயம்
வாடுகிறது.......!!!
தரையில்
மீனாக
தவிக்கிறேன்
கரையினில்.....தாவி
வந்து
அடித்துச்
செல்லும்
அலைக்காக......!!!
இவன் கொண்ட
அவஸ்தைகள்
யார் சொல்லியும்
தீராது.....அவள்
வந்து
அணைத்துக்கொள்ளும்
வரை......!!!!