நானும் அழகிதான்
கல்லூரி சாலையோர ரோஜா
ஒன்று முத்தம் கேட்டது ...
அது என் வீடு தேடி
வந்து சத்தம் போட்டது ...
நித்தம் வருவாயா....
முத்தம் தருவாயா…
என்று தன் வெட்கம்விட்டு
என்னிடத்தில் மண்டி போட்டது ....
பட்டாம்பூச்சி கூட்டம்
ஒன்று என்னை சுத்துது...
என் சட்டை பூவில்
தேனெடுக்க திட்டம் போடுது...
காலைநேர பண்பலையில்
என் கீதம் ஒலிக்குது
அதை சோலைக்குயில்
ஒன்று கேட்டு ரசிக்குது…
மேகங்கள் வானவில்லில்
ஊஞ்சல் கட்டுது...
அதில் உல்லாசமா
ஆடசொல்லி
என்னை அழைக்குது...
காலைநேர பூக்களேல்லாம்
பூத்துக்குலுங்குது
அவை என் கூந்தலேரி வாழ்ந்து
பார்க்க தவம் இருக்குது...