சுவாமி விவேகானந்தர்

மானிடப் பிறப்பெடுத்தார்..
பல சிந்தனை ஊற்றுக்களின் பிறப்பிடமானார்...
சிகாகோ சென்று உலகம் மெச்ச
ஓரு பேருரை ஆற்றினார்...
சகோதர சகோதரிகளே என ஆரம்பித்து
உலகை தன் பக்கம் திரும்ப வைத்தார்..
மக்கள் மெய்ஞானம் காண
சொற்பொழிவுகள் ஆற்றி
வாழ்வின் கடைசிவரை அதற்கெனவே உழைத்தார்..
ராமகிருஷ்ண பரம்ம ஹம்சரின் சீடர்..
இவர் இன்று பிறந்து வந்தாலும்
உலக மக்களை திருத்த
நல் வழிப் படுத்த
தீயவை கொன்று நல்லவை வெல்ல
இறை சிந்தனை மட்டுமே மனதில் கொள்ள
இன்றும் எங்கோ ஒரு நாட்டில்
தனது வார்த்தைகளை
பறைசாற்றிக் கொண்டே தானிருப்பார்...
உலகம் எப்போதும் போல
தன் வழியில் தேவையில்லாத வழியில்
சொல்பவர் சொல்லட்டும் அது அவர் பாடு
நமது வாழ்வுமுறை அதில் பணம் மட்டும் தேடு
மனமா உண்மை இறை மார்க்கமா அதை தூரப் போடு
என்று சொல்லிக்கொண்டு
ஓடிக்கொண்டே இருப்பார்கள்..