திரை வரி -அவளுள் நான்
பிஞ்சு நெஞ்ச போல கொஞ்சி பேசி நீயும் கொள்ளுற
உன் பார்வையாலே எனை பைத்தியமா சுத்தவைக்குற
அடியே உண்ணெணைப்பு உள்ளுக்குள்ள வலிக்குது
என் உயிரு உனக்காகன்னு இதயம் துடிக்குது
வானமும் பூமியுமா வாழனும்
இரவும் பகலுமா சேரனும்
மத்தாப்பு போல மாறாத
வீரப்ப காட்டி விலகாத
அன்ப நீ அழிக்காத
அக்னியா என்ன உருக்காத
நீ விட்டு போனால் நான் செத்துப்போவேன்
சேர்ந்து வாழ்வேன் நீ ஒத்து போனால்
-தொடரும் மறுபக்கம் .