தமிழ்

இந்த செடியின் பெயர்
உங்களுக்கு தெரியுமா?

நிச்சயம் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.
எனக்கும் தெரியாது...

ஆனால் சிறுவயதில் இருந்தே
இதனோடு விளையாடி இருக்கிறேன்...

இது இன்னும் முதிர்ச்சி அடைந்து
கருத்து போகும்.
அதை பிய்த்து தண்ணீரில் போட்டால் வெடிக்கும்.

சிறு வயதில் தோழிகளுடன்
இதை பிய்த்து நீரில் போட்டு
வெடிக்க வைத்து வேடிக்கை பார்த்து
முத்துப்பற்கள் தெறிக்க கூடி சிரிப்போம்...

அது எல்லாம் ஒரு பொற்காலம்...
இன்றைய தலைமுறை அதை எல்லாம்
இழந்து விட்டார்களே என்று நினைக்கையில் வருத்தமாக உள்ளது...

இதை நாம் அடுத்த தலைமுறைக்கும்
கொண்டு செல்வோம்.
மகிழ்ச்சியை மனதில் விதைக்க செய்வோம்...
வாழ்க்கை என்ன என்பதை அறியச் செய்வோம்...

எதற்கெடுத்தாலும் தற்கொலை தான்
தீர்வு என்று இளையதலைமுறை
இருப்பதற்கு காரணம் இதுவும் ஒன்று...
இயற்கையோடு அவர்கள் இணைந்து வாழவில்லை என்பது தான் அடிப்படை...
அதை வழங்காமல் விட்டது பெற்றோர்களின் தவறாகும்.

இந்த செடியைப் போல் தான் தமிழும்...

நம் தலைமுறைக்கு இந்த செடி என்ன செய்யும் என்று தெரியும்
ஆனால் அதன் பெயர் தெரியாது...

வரும் தலைமுறைக்கு இப்படி ஒரு செடி இருக்கிறாதா
என்பது கூட தெரியாமலேயே போகலாம்...

தமிழும் அப்படித் தான் நமக்கு...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த குடியில்

நம் மூதாதையருக்கு தமிழ் இலக்கண இலக்கியம் நன்கு தெரியும்

நமக்கு வார்த்தைகள் தெரியும்
அந்த வார்த்தைக்கான சரியான பொருள் தெரியாது...

வரும் தலைமுறைக்கு?????

வார்த்தையே தெரியாமல்
நம் வாழ்க்கையே(மொழியே) தெரியாமல் போய் விடக் கூடும்...

நாம் அவர்களுடன் தமிழில் பேசாவிட்டால்.....

என்றாவது ஒரு நாள்
என்றில்லாமல்
என்னாளும்
எல்லாவற்றையும் தமிழில் பேசுங்கள்...

நம் மொழி செழித்து வளர்ந்த மொழி...
வளரும் மொழி...
நம்மால் அழியக் கூடாது...

ஒரு மொழி அழிகிறது என்றால்
அது இந்த பாதையில் தான்
அமைகிறது...

ஒரு தலைமுறைக்கும்
இன்னொரு தலைமுறைக்கும்
இடையே ஏற்படும் இடைவெளி...
பரிமாற்றமே இருப்பதில்லை...

நான் தாய் மொழி மீது
அதிக காதல் கொண்டவன்(ள்)
என்று தற்பெருமை பேசாதீர்...
தமிழில் பேசுங்கள்...

ஒரு மொழி அழிகிறது என்றால்
அந்த இனம் அழிகிறது என்று அர்த்தம்
அந்த இனத்தின் அடையாளம் அழிந்து வருகிறது என்று அர்த்தம்

தமிழ் நம்மால் வாழவில்லை
நாம் தான் தமிழால் வாழுகிறோம்

தமிழ்
தனக்கே உரித்தான
அடையாளங்களை
அள்ள அள்ளவும் குறையாமல்
தன்னகத்தே ஆழி போல்
மலை போல்
குவித்து வைத்துள்ளது

உலகின் முதல் மொழி
செம்மொழி
ஆதி மனிதன் பேசிய மொழி
மனிதன் யாவருக்கும் பொது மொழி
கண்டங்கள் தாண்டி வாழும் மொழி
எல்லைக்கோடுகள் இல்லா
எங்கும் எல்லா இடங்களிலும் கமழும் மொழி
எம் மொழி
நம் மொழி
தமிழ் மொழி

நாம் நம் மொழியை பேச தவறிவிட்டால்
அடையாளம் அற்றவர்களாய் ஆகி விடுவோம்.....

என்னாளும் அடையாளத்தோடு வாழ்வோம்
தமிழச்சி(தமிழன்) என்று...
தமிழால் உலகை ஆள்வோம்...

~ தமிழச்சியாய் பிறந்து
ஒவ்வொரு நொடியும் தமிழச்சியாய் வாழ்ந்து தமிழச்சியாகவே மரணிக்க நினைக்கும்
தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Sep-16, 7:43 am)
Tanglish : thamizh
பார்வை : 133

மேலே