மாறும் மனிதர்கள்

அன்பானவன் என்று
அருகில் அமர்ந்தாய்

நன்பன் என்னும்
பெயரில் நடிப்பை
காட்டினாய்

ஒருநாள் எதிரி என்று
எதிரில் நின்றாய்!

இன்று தூரத்தில் இருந்தாலும்
துரோகியாக இருக்கின்றாய்

மாறும் உலகில் மாறமல்
இருக்க நீ மட்டும்
விதிவிளக்கா என்ன?

மாறியது உன்
சுயநலமா? இல்லை

மாறமல் இருப்பது என்
சூழ்நிலையா? என
தெரியவில்லை!

தெரிந்தாலும்
மாறவும் மாட்டேன்
மறக்கவும் மாட்டேன்

காரணம்

என்றும் மாறதவன்
நான் மனிதா...!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (15-Sep-16, 7:23 pm)
Tanglish : maarum manithargal
பார்வை : 216

மேலே