இதயத்தின் தீர்ப்பு

உறக்கத்தைத்
திருடிச் சென்று
உளற வைத்தாய்
விழிகளை.

திருடிச் சென்றவளோ
நீ தான்
தண்டனை என்னவோ
எனக்கு.

இதயத்தை
சிறைப் பிடிக்க
உத்தரவிட்டது
உன் விழிகள்.

காதல் சிறையில்
தவிக்குது இதயம்
செய்த தவறு
தெரியாமல்.

ஜாமினில்
எடுக்கச் சொல்லி
கட்டளையிட்டது
கண்களுக்கு.

வழக்குரைக்க
நாதி அற்று
வழிந்தோடுது
விழிகளிரண்டும்.

விடுதலையில்
வெளியே வர
துடி துடிக்குது
இதயம்.

ஆயுள் முழுக்க
தண்டனை வழங்கி
தீர்ப்பு சொன்னது
உன் இதயம்.

எழுதியவர் : தங்கமணிகண்டன் (19-Sep-16, 1:50 am)
பார்வை : 285

மேலே