நலம், நலமறிய ஆவல்

உறவுப் பாலமாய் - உயிர்
நட்பின் பூபாளமாய்,
பாசப் பிரதிபளிப்பாய் - உயர்
நேசப் பிணைப்பாய்,
காதல் தூதுவனாய் அவர்தம்
சாதல் சாசனமாய்,
உள்ளக்குமுறலாய்,
உணர்ச்சி வெளிப்பாடாய்,
உலகமெங்கும்
உலாவந்த கடிதங்கள்
தபால்காரர் வருகைக்கு
தவமிருந்த காலங்கள் .
அவசர அவசரமாய்
பிரித்து, படித்து,
மகிழ்ந்ததும், அழுததும்,
நினைவலைகளாய்
நெஞ்சினிலே.
நினைவலைகளை
கலைத்தது
அலைபேசி அழைப்பு பாடல்.
"நலம் நலமறிய ஆவல்"