ப சொக்கலிங்கம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ப சொக்கலிங்கம் |
இடம் | : பீளமேடு, கோவை |
பிறந்த தேதி | : 25-Apr-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Sep-2016 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 10 |
அரசு ஊழியர்.
துப்பட்டாவால்
முகம் மறைத்து,
இருகரம் கொண்டு
இடைஅணைத்து,
இடைவெளியின்றி,
இளைஞனுடன்
இரு சக்கர வாகனத்தில்
பகல் பொழுதில்
பயணிக்கும்
பருவப்பெண்ணை
பார்த்ததும்
மின்னலாய்
தோன்றி மறைந்தது
காலையில்
கல்லூரிக்கு
சென்று வருகிறேன்
என்று சொல்லிவிட்டு
சென்ற
என் மகளின் நினைவு.
துப்பட்டாவால்
முகம் மறைத்து,
இருகரம் கொண்டு
இடைஅணைத்து,
இடைவெளியின்றி,
இளைஞனுடன்
இரு சக்கர வாகனத்தில்
பகல் பொழுதில்
பயணிக்கும்
பருவப்பெண்ணை
பார்த்ததும்
மின்னலாய்
தோன்றி மறைந்தது
காலையில்
கல்லூரிக்கு
சென்று வருகிறேன்
என்று சொல்லிவிட்டு
சென்ற
என் மகளின் நினைவு.
துப்பட்டாவால்
முகம் மறைத்து,
இருகரம் கொண்டு
இடைஅணைத்து,
இடைவெளியின்றி,
இளைஞனுடன்
இரு சக்கர வாகனத்தில்
பகல் பொழுதில்
பயணிக்கும்
பருவப்பெண்ணை
பார்த்ததும்
மின்னலாய்
தோன்றி மறைந்தது
காலையில்
கல்லூரிக்கு
சென்று வருகிறேன்
என்று சொல்லிவிட்டு
சென்ற
என் மகளின் நினைவு.
இரு சக்கர வாகனத்தில்
கல்லூரிக்கு
பயணிக்கிற மகனிடம்,
கல்லூரியில்
பத்திரமாய் சேர்ந்ததாய்
எனக்கு
காலோ, மெஸஜோ,
மிஸ்டுகாலோ
கொடுப்பா..
தினமும் கேட்கிற தாயிடம்
கல்லூரியில்
அதற்கெல்லாம்
நேரமில்லை
எனக்கு
என்று பதில் சொல்கிற
மகன்
எந்த நேரத்திலும் 'பிரேக்கப்' ஆகப்போகிறவளுக்கு
எழுபது மெஸஜ் அனுப்பியிருந்தான்
கல்லூாி நேரத்தில்...
விடியல்கள் தோறும்
விழிகளை விரித்து
பயணிக்கும் பாதையெல்லாம்
தேடுகிறேன்...
அறிமுகம் இல்லா
ஆயிரம் முகங்கள்...
கண்டும் கடந்தும்...
காணும் மனிதரில்
நீ இல்லை...
தேடலில் தேய்ந்த கால்களும்
தேடிக்களைத்த கண்களுமாய்
தேடலை தொடர்கிறேன்.
தேடிப்பெறுகிற
தேடலில்லை
தேடலை விடவும் சம்மதமில்லை.
கண்வலை விரித்து
களைத்துபோனவன்...
கண்ணாடி திரைகளில்
மின்வலை விரித்து
தேடுகிறேன்...
மீண்டும் மீண்டும்...
இணையம் துழாவி,
'இனணயாது' போனவளின்
இன்முகம் தேடுகிறேன்...
காணும் முகங்களில்
காதலி நீ இல்லை...
இலைகளை பறித்து
கிளைகளை வெட்டி
முழுமரம் கழித்து
புதையுண்ட வேர்களாய்...
ஏழு மணிக்கு எழு !
எட்டு மணிக்கு உண் !
ஒன்பது மணிக்கு ஓடு !
பகல் முழுதும் பணம் தேடு !
இரவில் திரும்பு !
தொடு திரைகளிலும்
தொலைக் காட்சிகளிலும்
தொலைந்து போ !
உண்டு
உறங்கி
விழித்து
மீண்டும்
மீண்டும் ஓடு !
சுயநலத்தில் சுருங்கிப் போ !
சக மனிதனை மற!
அவலங்களை கண்டு அன்னியமாகு!
இப்படியே இயந்திரமாய் இயங்குகிற வாழ்க்கையில்...
இடையிடையில்
குற்ற உணர்வுகளுடன்
உறுத்தல்களாய்
அவ்வப்போது விழித்து கொள்கிறது
மனதுக்குள்
மரத்துப் போன "மனிதம்" !
பொறியியல்
படித்தால்,
பொற்காலம்
உண்டென்று;
வாழ்வியல்
கற்றோர்
வாயாரப் புகழுகின்றார்.
மருத்துவம்
படித்தால்,
மகத்துவம்
உண்டென்று;
மக்களை
பெற்றவரோ,
மயங்கித் திரிகின்றார்
.
களைகட்டி
நடக்குதிங்கே
கல்வியெனும்
வியாபாரம்.
தரமான
கல்விக்கோ,
தரவேண்டும் ஏராளம்.
கட்டாயக் கல்வி
என்று
சட்டங்கள் போட்டாலும்,
கட்டணம் ஏதுமின்றி
கிட்டிடுமா
தொழிற்கல்வி ?
லட்சங்கள்
கொடுத்தேனும்
லட்சியத்தை
அடைவோமென்று
நிதி கொட்டி
கொடுத்த கூட்டம்
நீதி கேட்டு
அலைகிறது.
நீதிமன்ற வாசலிலே.
பொறியியல்
படித்தால்,
பொற்காலம்
உண்டென்று;
வாழ்வியல்
கற்றோர்
வாயாரப் புகழுகின்றார்.
மருத்துவம்
படித்தால்,
மகத்துவம்
உண்டென்று;
மக்களை
பெற்றவரோ,
மயங்கித் திரிகின்றார்
.
களைகட்டி
நடக்குதிங்கே
கல்வியெனும்
வியாபாரம்.
தரமான
கல்விக்கோ,
தரவேண்டும் ஏராளம்.
கட்டாயக் கல்வி
என்று
சட்டங்கள் போட்டாலும்,
கட்டணம் ஏதுமின்றி
கிட்டிடுமா
தொழிற்கல்வி ?
லட்சங்கள்
கொடுத்தேனும்
லட்சியத்தை
அடைவோமென்று
நிதி கொட்டி
கொடுத்த கூட்டம்
நீதி கேட்டு
அலைகிறது.
நீதிமன்ற வாசலிலே.
இருண்டு கிடந்த
குடிசைகளின்
சின்ன சின்ன
கீற்று விரிசல்கள்
வழியே
வெள்ளிக் காசுகளை
விதைத்திருந்தது
வெண்ணிலா...!
ஊரெங்கும் மின் வெட்டு,
கண்ணீர் விட்டன,
மெழுகு வர்த்திகள்.
இயங்காத மின் சாதனங்கள்.
இயங்க முடியாமல்
முடங்கிப் போனது,
'இயந்திர' வாழ்க்கை.
தெய்வ மகளையும்,
குல தெய்வத்தையும்,
தரிசிக்க முடியாமல்
'வாணி'யும், 'ராணி'யும்.
ஆயிரம் மின்விளக்கொளியில்
ஆங்காங்கே பொதுக்கூட்டம்.
மின் வெட்டை கண்டித்து.
ஊரெங்கும் மின் வெட்டு,
கண்ணீர் விட்டன,
மெழுகு வர்த்திகள்.
இயங்காத மின் சாதனங்கள்.
இயங்க முடியாமல்
முடங்கிப் போனது,
'இயந்திர' வாழ்க்கை.
தெய்வ மகளையும்,
குல தெய்வத்தையும்,
தரிசிக்க முடியாமல்
'வாணி'யும், 'ராணி'யும்.
ஆயிரம் மின்விளக்கொளியில்
ஆங்காங்கே பொதுக்கூட்டம்.
மின் வெட்டை கண்டித்து.
உறவுப் பாலமாய் - உயிர்
நட்பின் பூபாளமாய்,
பாசப் பிரதிபளிப்பாய் - உயர்
நேசப் பிணைப்பாய்,
காதல் தூதுவனாய் அவர்தம்
சாதல் சாசனமாய்,
உள்ளக்குமுறலாய்,
உணர்ச்சி வெளிப்பாடாய்,
உலகமெங்கும்
உலாவந்த கடிதங்கள்
தபால்காரர் வருகைக்கு
தவமிருந்த காலங்கள் .
அவசர அவசரமாய்
பிரித்து, படித்து,
மகிழ்ந்ததும், அழுததும்,
நினைவலைகளாய்
நெஞ்சினிலே.
நினைவலைகளை
கலைத்தது
அலைபேசி அழைப்பு பாடல்.
"நலம் நலமறிய ஆவல்"