விவசாயம்

செயற்கை அரிதாரம்
பூசுவதில்லை
நாங்கள்,
இப்புவி என்ற
நாடகமேடையில்,
நாங்களும்
நடிகர்களே
ஏற்றிருப்பதோ
விவசாய பாத்திரம்
திறம்பட நடிக்கத்
தவறினால்
இப்புவியில் மற்ற
பாத்திரங்கள்
நிரம்புவது
கேள்விக்குறியாகிப்
போகும். #sof #சேகர்