நினைவுகள்
உன் நினைவுகளைச் சுமந்தபடி
நீரினுள் மூழ்கி பயணித்தேன் ஒரு நெடும்பயணம்...
நான் அழிந்துவிடக்கூடும் என்கின்ற அச்சம்
என் மனதோரமாய் அமர்ந்திருந்தாலும்...
பயணங்கள் முடிந்து
என் பாதைகளை மாற்றியமைத்த பின்பும்...
அன்றுபோல் இன்றும் என்னிடம்
அயராமல் நடனமாடும் உன் நினைவுகளை என்ன செய்ய...?