மதுரை செந்தூர விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

சிந்தித்த வர்க்கருளும் செம்மல் விநாயகனை,
செந்தூர னைத்,தினமும் சிந்தையில் - வந்தனை
செய்வோர்க்கு நன்மையெலாம் செய்திடும் நல்லவனை
தெய்வ மவனைத் தொழு! 1 *

மனதினில் சிந்தித்த வர்க்கருளும் செம்மல்
இனிதான செந்தூர நாதன் – கனிவான
நல்விநாய கன்தாளை நாள்தோறும் வந்தித்தால்
எல்லையிலா இன்பந்தான் உண்டு! 2 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Oct-16, 10:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே