ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
படித்தவர்களும்
ரேகை பதித்தனர்
அலுவலகம் நுழைகையில் !
ஓரடி ஆத்திசூடி
ஈரடி திருக்குறள்
மூவடி ஹைக்கூ !
பெயரிலேயே
திரு உடையது
திருக்குறள் !
பெயரிலேயே
திரு உடையவர்
திருவள்ளுவர் !
மல்லிகைக்கு மட்டுமல்ல
மாசற்ற அன்பிற்கும்
மதுரை !
மனிதர்களை மட்டுமல்ல
கணினிகளை தாக்குகின்றன
கிருமிகள் !
அமைதி காக்கவும்
கத்திச் சொன்னார்
ஆசிரியர் !
வழியனுப்ப வந்தவர்
உடன் பயணித்தார்
புறப்பட்டது தொடரி !
இடுகாடு வேண்டாம்
சுடுகாடு போதும்
இடநெருக்கடி
இறந்த பின்னும்
வாழும் விழிகள்
விழி தானம் !
வேண்டாம் ஏளனம்
மானம் காத்தது
மாற்றுத்திறனாளி !
திருந்தாத மக்கள்
தெரிந்தே ஏமாறுகின்றனர்
தனியார் நிதிநிறுவனம்
மனிதனுக்கு
அழகு
மனிதநேயம் !
அடுக்குமாடியில்
நெருக்கமாக வீடுகள்
தூரமாக மனசுகள் !