ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படித்தவர்களும்
ரேகை பதித்தனர்
அலுவலகம் நுழைகையில் !

ஓரடி ஆத்திசூடி
ஈரடி திருக்குறள்
மூவடி ஹைக்கூ !

பெயரிலேயே
திரு உடையது
திருக்குறள் !

பெயரிலேயே
திரு உடையவர்
திருவள்ளுவர் !

மல்லிகைக்கு மட்டுமல்ல
மாசற்ற அன்பிற்கும்
மதுரை !

மனிதர்களை மட்டுமல்ல
கணினிகளை தாக்குகின்றன
கிருமிகள் !

அமைதி காக்கவும்
கத்திச் சொன்னார்
ஆசிரியர் !

வழியனுப்ப வந்தவர்
உடன் பயணித்தார்
புறப்பட்டது தொடரி !

இடுகாடு வேண்டாம்
சுடுகாடு போதும்
இடநெருக்கடி

இறந்த பின்னும்
வாழும் விழிகள்
விழி தானம் !

வேண்டாம் ஏளனம்
மானம் காத்தது
மாற்றுத்திறனாளி !

திருந்தாத மக்கள்
தெரிந்தே ஏமாறுகின்றனர்
தனியார் நிதிநிறுவனம்

மனிதனுக்கு
அழகு
மனிதநேயம் !

அடுக்குமாடியில்
நெருக்கமாக வீடுகள்
தூரமாக மனசுகள் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (17-Oct-16, 9:43 am)
பார்வை : 336

சிறந்த கவிதைகள்

மேலே