தேசம் எனது அன்னை

தேன் தமிழ் சித்திக்கும்
தேசத்தின் புகழ்தனை
திறம் கமழ பாடுகின்றேன்
இயற்கை அன்னையீன்ற கொடை
இந்து சமுத்திரத்தின் சொத்து
இருள் அகன்று
இறையருள் கூடிய எனது தேசம்
இயற்கை எழில் நிறைந்த
இலங்கா புரி
ஐவகை நிலங்களால் அலங்கரித்த இதய பூமி
மூலிகை கமழும் சஞ்சீவி
மூவுலகும் யாசிக்க விரும்பும்
எனதுஅன்னை தேசத்தில்
மாங்கனித்தீவிலே பசுபதியின் பஞ்ச ஈஸ்வரங்கள்
சொர்க்கமாய் படைத்தான் இராவனேஸ்வரன்
எத்திசையும் போற்றும்
பெரும் பூமியானது சோழரின் ஆட்சியில்
எக்காலமும் போற்ற வீரம் புகட்டினான்
எங்கள் குல எல்லாளன்
பழம்பெருமை வாய்ந்த எம் தேசம்
பாழகிப்போகின்றது அந்நிய வசத்தால்
பல தேசம் திரிந்தலைந்தும்
பழம்தமிழ் சுவை தருமோ !
நிலம் விழுங்கும் நீச்சர்களால்
நிம்மதி தருமோ !
அன்னை தேசமே !
உன்னைதொழுவது முதற்கடமையே!
இனிதாய் உன்னில் பிணைந்தேன்
இறுதியாய் உன்னில் சங்கமமாவேன்
இதயத்தில் அன்னையாக பூசிப்பேன்
தமிழனின் வீரத்தால் வளம் பெற்று
நன் மொழியால் நலம்பெற்று
ஈழத்தாய் நிமிர்ந்து நின்றாள்
படை கொண்டு வந்து
பண்பாட்டை சீரழித்தார்கள்
மோகம் பூண்டு
மண் ,பெண்களை கற்பழித்தார்கள்
தடையாவும் மண்டியிடா த்தமிழர்களின் வீரம்
உடைத்தெறிந்தது மாண்புமிகு
புனிதர்களின் திறம்
இவ் வீரம் புகட்டிய
மாசற்ற வீரர்களின் வீரதீரம்
என்றும் எம்முள் வாழும்
அன்னை தேசத்தின்
மகிமை மாறாது திகழும்