பாகிஸ்தானைவிட பயங்கரவாதி

ஆடி மாதத்தில் .............
ஆர்ப்பரிக்கும் காவிரியை
தேடி பார்க்கிறேன் ....?
திகைப்பாய் ..இருக்கிறது
நாடி நரம்பெல்லாம் .........
விவசாயம் தமிழனுக்கு
ஓடி ஒளிந்த இடம்
ஒருவணுக்கும் தெரியவில்லை
சோழர் ஆட்சியிலே ..........
சோறுபோட்ட...
விளைநிலங்கள்
தண்ணீரு இல்லாமல்
தரிசாய் கிடக்குதடா !
செந்நீர் சிந்தி
செய்த விவசாயம்
கண்ணீராய் இங்கே ....
கரைந்து போகுதடா
வேட்புமனு
தாக்குதலுக்கு
வருகின்ற .....கூட்டம்கூட
விவசாய பிரச்சனைக்கு
வந்துதான் கூடலையே?
நீதி மன்றம் .........
சொல்லிக்கூட நீரை
தராதவனை
பாகிஸ்தானைவிட
பயங்கரவாதி என்று ....
சொல்லவேண்டும்
இந்த தலைமுறையில் ..........
வராத காவிரியை
இனி எந்த தலைமுறையிலும்
எதிர்பார்க்க முடியாது ......?
ஏனடா ?தமிழா...........
இன்னும் உறக்கம் ?
எழுந்து புறப்பட்டு
அதுதான் முழக்கம்

எழுதியவர் : இரா .மாயா (25-Oct-16, 3:44 pm)
பார்வை : 82

மேலே