சாலையோர பூக்களையும் ரசிக்கிறேன் 555

ப்ரியமானவளே...

குளத்தில் இருக்கும் கருங்கல்லை
போல் இருந்த என் மனம்...

ஓராயிரம் இளம்
பார்வைகளில் மூழ்கியும்...

கரையாத என் மனம் இன்று
சர்க்கரையை போல் கரைந்ததடி...

உன் ஒரேயொரு
ஈரப்பார்வையில்...

எனக்கு ஓவியம் மட்டும்
தீட்ட தெரிந்திருந்தால்...

உன்னையும் உன் ஈர பார்வையும்
வண்ணங்களில் தீட்டி இருப்பேன்...

உன்னை நான் பார்த்த பிறகுதான்
சாலையோர பூக்களையும் ரசிக்கிறேன்...

மலரும் மொட்டுகள்
சப்தங்களை நான் கேட்கிறேனடி...

என் விழிகளுக்கு ரசிக்க
கற்றுக்கொடுத்த உன்னை...

நான் ரசிக்க வேண்டும்
என் வாழ்நாளெல்லாம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Nov-16, 7:46 pm)
பார்வை : 180

மேலே