கேள்விக்குறியாய் காதல்

காதலியே !
கால வெள்ளத்தில்
உன் நினைவுகளின்
மடியில் நான்
கரை சேர்ந்து
வெகு காலமாயிற்று !

காதலின் வீதியில்
கைகோர்த்து
திரிந்த நீ ?
கைகூடும் நேரம் ஏன்
கை உதறுகிறாய் !

நீ அறிவாயா ?
நான் சுவாசிப்பது
காற்றோடு உன்
காதலையும் தான் !

நீரில்லா மீனும்
நீயில்லா நானும்
வாழ்வதெப்படி
சாத்தியம் ?

காற்றில் கற்பூரமாய்
கரைகிறது காலமும்
என் காதலும் !

கை தூக்கி
கரையேற்று
இல்லை நீயே
கானலாக்கியென்னை
கல்லறையிலடக்கு !

எழுதியவர் : (1-Dec-16, 2:04 pm)
பார்வை : 88

மேலே