கேள்விக்குறியாய் காதல்
காதலியே !
கால வெள்ளத்தில்
உன் நினைவுகளின்
மடியில் நான்
கரை சேர்ந்து
வெகு காலமாயிற்று !
காதலின் வீதியில்
கைகோர்த்து
திரிந்த நீ ?
கைகூடும் நேரம் ஏன்
கை உதறுகிறாய் !
நீ அறிவாயா ?
நான் சுவாசிப்பது
காற்றோடு உன்
காதலையும் தான் !
நீரில்லா மீனும்
நீயில்லா நானும்
வாழ்வதெப்படி
சாத்தியம் ?
காற்றில் கற்பூரமாய்
கரைகிறது காலமும்
என் காதலும் !
கை தூக்கி
கரையேற்று
இல்லை நீயே
கானலாக்கியென்னை
கல்லறையிலடக்கு !