புதுக்கவிதைக்காரன்

புதுக்கவிதைக்காரன்
*
எதற்காக என
எழுதத் தொடங்கி
இதற்கானது என
நிறைவேற்றித் திரும்ப
அதற்கான பொருளில்
அங்கே ஓர் கவிதை !
*
புள்ளிக்கான காத்திருப்பில்
வரிகள்...
வரிகளைத் தேடும்
வார்த்தைகள்...
வார்த்தைகளாகாத
எழுத்துக்கள்...
கசங்கி கிடைக்கும்
காகிதங்கள்...
சொல்லித்தருகிறது கவிதை !
*
மந்தாரை மலர்ந்ததில்
மாலை மயக்கத்தில்
மனப்பை கருவுற்று
மையூற்றித் திரும்புகையில்
மறந்து போனது கவிதை !
*
#மணிமீ
11 - July - 16

எழுதியவர் : மீ.மணிகண்டன் (3-Dec-16, 9:32 am)
பார்வை : 125

மேலே