மனம் திறந்திடு
பொன்னகையைச்
சுமந்து வர வேண்டாம்
பெண்ணே உன் புன்னகை
மட்டும் போதும் !
கட்டுக்கட்டாய்
கரன்சி வேண்டாம்
பெண்ணே என்
கவிதைப் பிரசவத்திற்கு
நீ கவிதையானால்
போதும் !
நீ சம்மதம்
சொன்னால் மதம்
மறுப்பு சொல்லாது !
இனம் இடை நிற்காது !
என் கவிதை
முத்துக்களுக்காக
காத்திருக்கிறது
தமிழ்த்தாயின்
மணிமகுடம் !
உன் இதயம்
இசைந்தால் போதும் !
என் கவிதை நதி
கரைபுரண்டோடும் !