சிரிப்பு​ வரும் மனிதனை நினைத்தால் ​

சிந்திக்கும் ஆற்றல்
பேசுகின்ற வாய்ப்பு
உழைக்கும் திறன்
இருந்தும் மனிதன்
செய்திடும் செயல் ​
விந்தையிலும்​ விந்தை
வியக்கும் வினாக்குறி
கேலிக்குரியக் கேளிக்கை ​!

பிறந்திடும்​ வழியொன்றே மனிதனுக்கு
இறந்தபின் அடைவதும் இடமோன்றே
இடையில் வருவதேன் சாதிமதவெறி
பிரிவுகள்​ காண்பதேன் பிறந்தவுடன் !

​பற்றுவதேன் பணவெறி உள்ளத்தில்
​தொற்றுவதேன் ​குலவெறி குணத்தில்
​நெஞ்சமும் நஞ்சாகுது ​துளித்துளியாய்
வஞ்சமும் வேரூன்றுது நெஞ்சங்களில்
தஞ்சம் அடைந்து தழைக்குது சமூகத்தில் !

சுயநலம் கொடிகட்டிப் பறக்கிறது சுதந்திரமாய்
பொதுநலம் கைகட்டி நிற்கிறது பொம்மையாய் !
முதிர்ந்த மனங்கள் உதிர்ந்தப் பூக்களானது
வளரும் கொடிகள் பாதைமாறி படர்கிறது !

ஐந்தறிவும் பார்க்கிறது ஏளனமாய் ஆறறிவை
சிரிக்கிறது மனிதனை நினைத்து மந்தியும்
சிந்திக்கும் மனிதனும் மாறுவானா இனியும்
சிந்தையில் சுழல்கிறது நாளும் எனக்கும் !

பழனி குமார் ​

எழுதியவர் : பழனி குமார் (4-Dec-16, 2:37 pm)
பார்வை : 321

மேலே