கண்ணீருடன் ஒரு கவிதாஞ்சலி

அம்மா என்ற
சொல்லுக்கு
தமிழகத்திற்கு
உன் முகம்தான்
அடையாளம் !

சாதாரணமாய்
பிறந்து சரித்திரமாய்
மறைந்தாய் !
சரித்திரத்தில்
இடம்பெறவில்லை நீ !
சரித்திரமாகவே
வாழ்ந்தாய் நீ !

அரிதாரம் பூசி
ஆரம்பித்த வாழ்வு
அவதாரமாக முடிந்தது !

ஆளுமைக்கு
அர்த்தமாக அகராதி
இனி உன் பெயர்தான்
உச்சரிக்கும் !

அவதூறு உன்மேல்
ஆயிரம் சொன்னாலும்
அசைக்க முடியாத
சிகரம் நீ என்பதே
உன் சிறப்பு !

இழிமொழிகளும் வசைமொழிகளும்
மழையாய் பொழிந்தாலும்
வாழ்வாங்கு வாழ்ந்ததே
பெரு வியப்பு !

வைராக்கியத்தின் வடிவமே !
உலக வரலாற்றில் நீ
அழிக்க முடியாத
சக்தி .... !
தமிழக மக்களுக்கு
நீயே நவயுக சக்தி !

நாங்கள் பிரார்த்திக்கிறோம்
உன் ஆத்மா
பெற வேண்டி முக்தி !

தங்கத்தாமரையே !
உனக்கு என் கண்ணீருடன்
கூடிய கவிதாஞ்சலி
சமர்ப்பணம் !

எழுதியவர் : நெட்டூர் மு.கானிமுத்து (6-Dec-16, 4:12 pm)
பார்வை : 70

மேலே