பூமியும் நாமும் -அறிந்திடுவோமா
நீர் நெருப்பு
வான், மண்
காற்று ஆகிய
இவை ஐந்தும்
சேர்ந்ததே உலகு
இந்த பூதங்கள்
ஐந்தும் நம்
பூத உடலிலும்
ஐக்கியம்
எவ்வாறென்று கேட்கின்
சொல்கிறேன் கேட்பீரே
உலகுக்குள் நீர் தான் பிரதானம்
நம் உடலுக்குள்ளும் நீரே
உலகைச்சுற்றி காற்று மண்டலம்
நம் காயமும் காற்றின் அடைப்பே
உலகில் உள்ளும் வெளியும் தீ
நம் உடலிலுள்ளும் அக்கினி
அதுவே ஜாடராகினி என்பர்
நம் உடலே வானம்
எலும்பு கூடே உடலின் மண் ஆகும்
இன்னும் சொல்வேன் கேளுங்கள்
நம் பூமியை தாக்கும்
பூகம்பங்கள்,எரிமலை,வில்லன்கள்
மற்றும் சூறாவளிகள்
அவ்வப்போது பஞ்ச பூதங்களின்
ஏற்ற தாழ்வினாலே
அது போலவே
நம் உடலிலும்
பூதங்கள் ஐந்தில் ஏற்றத்தாழ்வு
பெரும் நோய்கள் உண்டாக்கும்
என் உடலுக்கு அழிவையே உண்டாக்கும்
எவ்வாறு அவனுக்கு அழிவு
அதில் இயங்கும் பஞ்ச பூதங்களின்
ஏற்ற தாழ்வுகளினால் போல்
இதை ஏன் விளக்கினேன் என்றால்
அறிவீரே நண்பர்களே இவையகத்தில்
நாம் ஒவ்வொருவரும் உண்மையில்
ஒரு மிகச்சிறிய பூமியே என்பேன்
ஐயா பூமியைப் படைத்தான் இறைவன்
என்றால் அதனுள் உறைகின்றான் அவனே
அஃதெனில் நம்முள் அவனே என்றறியலாம்
பின்னர் நம்முள் உறைபவனைக் கண்டுவிட்டால்
நமக்கேன் கவலை இவ்வுலகில் வாழ