பகவத் கீதையின் உட்கருத்து

எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும்
நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்
என்று எதற்காக நீ அழுகிறாய?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ
இழப்பதற்கு?
எதை நீ படைத்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை
மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள்
அது வேறு ஒருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (16-Dec-16, 7:33 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 178

மேலே