என் உள்ளம் உன்னிடம்

தினம் தினம்
விசித்திரமாக மாறும் என் வாழ்வில்
யாரும் அறியா என் மௌனத்தினை
அன்பே ஏனோ நீ மட்டும் அறிந்தாய்!,

அறிந்தும் அறியாதவாறு
நீ அமைதி காக்கும்போது
அமைதியின்றி அலையுதடி அன்பே
என் மனம் உன்பின்னே,

ஒவ்வொரு நொடியும்
ஓயாமல் பார்க்கும் உன் பார்வையில்
குறைந்ததடி என் பாதி ஆயுள்,

சிந்திக்க விடாமல் என்னை
சிதரடிக்கும் உன்
சிரிய புன்னகையில்
சிக்கி தவிக்கிறேனடி
வெளிவர முடியாமல்,

என்னேரமும் என்னை
விரட்டும் உன் விழியினை
மூடும் வேலையிலும்
திறக்கின்றதடி என் உள்ளம்
உயிரே உன்னிடம்!..........
........................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (20-Dec-16, 7:31 pm)
Tanglish : en ullam unnidam
பார்வை : 275

மேலே