காதல் பேசுகிறது
என்னைத் தெரிகிறதா?
நான் தான் காதல்!
அதோ அதோ...
காலங்களை கடந்து போகிறேன்,
கல்வெட்டாய் நிலைத்தும் போகிறேன்,
காவியமாகாது போனால் கூட,
கல்லேட்டாய் பதிந்தும் போகிறேன்.
கலையா நினைவுகளோடும்,
கண்நிறைய கனவுகளோடும்,
கற்பனைக்கெட்டா ஆனந்தத்தில்
காதலால் திளைக்கவிட்டு,
கண்ணியமாய் கைகூப்பி
காதலோடு வாழும் இதயமதில்
கையேட்டால் வாழ்வனைத்தையும்
கலையாமல் தீட்டி,
காதலது மாத்திரமே நிகரற்றது
அதுவும் காதலால் காலத்தின்
சாதலை சந்திக்கும்
சத்தியமானோருக்கு மட்டுமே
சாத்தியமது என்றொரு நாளில்
உணர்த்தி விட்டு,
விடைபெறும் ஓர் உயிருக்காய்
இன்னோர் உயிரின் கண்ணீரால்
சரித்திரமாகிறேன் நான்.
என்னைத் புரிகிறதா?
நான் தான் காதல்!
குறிப்பு :
இது உண்மைக்காதலர்களுக்கு மாத்திரமே..
அஸ்தீர்..