கடந்த கால நினைவுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆழ்ந்த உறக்கத்தையும்
திடுக்கிட்டு விழிக்க வைக்கும்
நினைவு உறக்கம் கிள்ளி..
பசுமையான நினைவுகள்
கண்ணீர் கொடுக்கும்
சிறிது புன்னகையுடன்..
அழியாத கோலமாய்
வேரூன்றி பதிந்துவிடும்
நிம்மதியும் கூடத்தரும்..
நினைவுகளே வாழ்வில் நிரந்தரம்
நிதம்வரும் அவை இதம்தரும்
சுகம்தரும் அவை சுகந்தமே....