கடந்த கால நினைவுகள்

ஆழ்ந்த உறக்கத்தையும்
திடுக்கிட்டு விழிக்க வைக்கும்
நினைவு உறக்கம் கிள்ளி..

பசுமையான நினைவுகள்
கண்ணீர் கொடுக்கும்
சிறிது புன்னகையுடன்..

அழியாத கோலமாய்
வேரூன்றி பதிந்துவிடும்
நிம்மதியும் கூடத்தரும்..

நினைவுகளே வாழ்வில் நிரந்தரம்
நிதம்வரும் அவை இதம்தரும்
சுகம்தரும் அவை சுகந்தமே....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (2-Jan-17, 10:43 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 452

மேலே