கடல்
கடல்
குழந்தையை
சந்தித்தேன்!
ஓயாமல்
அலை அலையாக
மழலை பேச்சு..
கவலையின்றி
சத்தமிட்டு
விளையாடிக் கொண்டிருந்தது..
என்னை
பிடிக்கவில்லை போல..
ஏனோ என்னிடம்
ஏதோ
சொல்ல வந்துவிட்டு
சொல்லாமல் சென்றது…
வரம் தான்..
என்றும்
குழந்தையாகவே இருக்கும்
கடல்!!!