நதிநீர் இணைப்பு
இன்றைய சூழலில் திரண்டுள்ள மிகப் பெரிய இளைஞர்கள் திரளானது தங்களது பாரம்பரியத்தை நிலைநாட்ட இரவு பகல் பார்க்காமல்,குளிர்,மழை, வெயில் என எதுவும் பார்க்காமல் போராடி வருகின்றனர்.
இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இதுவே ஓர் எடுத்துக்காட்டு.நம் பாரம்பரியத்தை காக்க போராடும் தமிழக இளைஞர்கள்..........
ஏன் காவிரி பிரச்சனைக்காக போராடக்கூடாது.இதே உத்வேகத்துடன் நதிநீர் இணைப்புக்காக ஏன் போராடக் கூடாது.காவிரி நதியில் நீர் இல்லாத காரணத்தால் எத்தனை விவசாயிகள் மாண்டனர்.நமது விவசாய பூமியை காக்க மாணவர்களும் இளைஞர்களும் ஏன் ஒரு குரலுடன் போரிடக் கூடாது.
காலகாலமாக விவசாயம் செய்து வந்த பூமியில் இன்று நீர் இல்லாமல் இருப்பது பெரிய கொடுமையாகும்.
இன்று திரண்டுள்ள அத்தனை பேரும் காவிரிக்காக ஏன் போரிடக் கூடாது.
வீட்டுக்கொரு வயல் வைத்திருந்த இந்த விவசாய பூமியில் தெருக்கொரு வயல் பிறகு ஊருக்கொரு வயல் என்ற நிலையும் வந்தது.ஆனால் இன்று அந்த தெருக்கொரு வயலும் ஊருக்கொரு வயலும் கருகியது.நன்செய் நிலமெல்லாம் இன்று வானம் பார்த்த பூமியாய் போனது தான் மீதம்.மழையின்றி நதியில் நீரின்றி நிலம் கருகுவதன் விளைவு இன்று நாம் அறியாமல் இருக்கலாம்.ஆனால் பிற்காலத்தில் நமது சந்ததியினர் ஒரு வேளை சோற்றுக்கும் வெளிநாட்டவனை நாடி நிற்க வேண்டிய நிலை தான் இருக்கும்
அப்படிப்பட்ட நிலை வராமல் இருக்க வேண்டுமாயின் நதி நீர் திறந்துவிட போரிட வேண்டும்.நமது நிலங்கள் அழியாமல் இருக்க இருவழிகளே உள்ளன.ஒன்று, உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்று கர்நாடக அரசு காவிரி நதியை திறந்து விட வேண்டும்.இல்லையேல் மத்திய அரசு நதிநீர் இணைப்பிற்கு இணங்க வேண்டும்.இன்று திரண்டுள்ள இளைஞர்களின் திரள் நமது மண்ணின் விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் காக்க ஒன்றிணைந்து கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைக்க வேண்டும்.
நதிநீர் இணைப்பிற்க்கு மத்திய அரசிடம் நிதி இல்லையென்றாலும் தமிழக மக்கள் ஒவ்வொருவரிடமும் ரூபாய் ௨௦ பெற்றாலும் போதுமானது தானே.
நம் மண்ணுக்காக நம் பூமிக்காக நாமே குரல் கொடுக்க வேண்டும்.