நிசத்தின் நிழலாக

நிசத்தின் நிழலாக ....!!!!



மூடி வைத்தப் பேனாவோ - என்
விரலை மட்டும் விரட்டுதடி !
தீர்ந்து போனத் தாள்கள் எல்லாம்
மேசை மேல் முளைக்குதடி !!
கசக்கிப் போட்டக் கவிதையும்
கண்முன் வந்தது கைசேரதடி !
நிசத்தின் நிழலாக !!! ( 22 )



நீங்கிப்போன நினைவுகள் எல்லாம்
நீந்தி வந்தே நிரம்புதடி !!
இமை மூடிப்போன விழிகளும்
விழித்துக் கொள்ள விரும்புதடி !
அணைத்து வைத்தக் கைப்பேசி
அடிக்கடி அலறத் துடிக்குதடி !
சுருங்கிப் போன முகத்தோலும்
விரும்பி கேட்டது வெந்நீரை !!
உள்ளிருக்கும் செல்லனைத்தும்
உன்கண்ணை பார்க்க ஏங்குதடி !!
அனைத்தும் நிசத்தின் நிழலாக ..!!! (55 )



தூக்கி வீசியத்தோல்பையும்
தொடர்ந்து வருகுது என்பின்னே !!
அழுக்காய் உள்ள ஆடைகளும்
சலவை செய்யச் சொல்லுதடி !!
சுற்றித் திரிந்த என்கழுத்து
அசையக்கூட மறுக்குதடி !!
அனைத்தும் நிசத்தின் நிழலாக ...!!!! ( 74 )



தோலைக் கருக்கும் இவ்வெயிலும்
தென்றல் போலத் தெரியுதடி !
என்றும் சிரிக்கா என் இதழும்
இன்று சிரித்தே மகிழுதடி !!



விட்டுக் கொடுக்கும் என் குணமும்
சொல்லித் தந்தது சுயநலத்தை !!
சிதறி போகா என் சிந்தை - சிதறிப்போய்
சிணுங்கி கொண்டே சிரிக்குதுதடி !!



கர்வம் கொண்ட என் கனவு
கண்ணீர் வடித்துக் கலங்குதடி !
விட்டுப் போன என் உயிரும்
உடனே உடலில் இறங்குதடி !!



இத்தனை நடப்பதும் ஏன் பெண்ணே -
தேவதை நீ என் கண் முன்னே !!
காதலை கேட்கிறேன் நினைவிழந்து
நிஜத்தை கொஞ்சம் திருப்பிக் கொடு !!



என்றும் எனை நீ தேடி
அன்பை மட்டும் தந்து விடு !!
சொல்லி விட்டேன் என் அன்பை
நானும் முடிவும் உன் கையில் !!
சேர்த்து வைக்கிறேன் கனவுகளை
அன்பின் அடிமையாய் நாம் வாழ !!



அழகியல் அன்பு அதுவாக ......
தேவதை நீ திரும்பிப் போனால்
என் தெருவும் தீப்பற்றி எரியுதடி !!
காத்திருப்பேன் காதலுடன் - அன்னை
தமிழின் அரவணைப்பில் - உன்
நினைவுகள் துணையோடு !!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (24-Jan-17, 3:07 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 96

மேலே