என் மனம் ஒன்றுதான்

காகம் கருப்பாய்
அவள் இருப்பாள்
கருங்குயிலாய்...தினம்
இன்னிசைப்பாள்
கேட்க கேட்க
என் மனம் மயங்கும்
அவள் ஒற்றைச் சொல்லில்தான்
என்னுடல் உயிர் இயங்கும்...
சிவந்த கோவை
செவ்விதழ்தனை
கொத்திச் செல்லும்
கிளியாகவேணும்..
இளம் க(ன்)னி தேனே
தினம் இரசித்து ருசிக்கத்தான்
ஆசைப்பட்டேன் நானும்...
கன்னக்குழி விழ சிரித்தாள்
அதில் மயங்கிதான் விழுவான் எமனும்
அவள் மட்டும் அனுமதித்தால்
காதல் கணவன் ஆவேன்.
இல்லையேல்....
அவள் நினைவில் இருந்து
இறந்து போவேன்...
இருமுகம் கொண்ட பெண்ணே
ஒருமனதாய் காதலிப்பது
என் தவறுதானே...!