உன் கொலுசுகள் என் தோழியடி

கடல் அலைபோல் நீ...
என்னைத் தொடத் துணிந்து
தோற்றுப்போகிறாய் என்று
நினைத்துக்கொண்டு- நீ
தொடமுடியாத தொலைவில்
நின்றுகொண்டிருக்கும் நான்...

நீ தொட முயற்சித்திருக்கமாட்டாய்...
இருந்தாலும் என்னைத் தேற்றிக்கொள்கிறேன்
கண்களால் தொட முயற்ச்சித்து
என்னைப்போல தோற்றிருப்பாய் என்று...

நீ அலை போல்
என் பின் அலைந்திருக்க - நான்
கண்களைத் திருப்பிக்கொண்டு
காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டேன்.
அலை எழுப்பும் அழகிய இசையைப்போல்
உன் கொலுசுகள் கொஞ்சும்
ஒலியை என் நெஞ்சத்தில்
இன்னிசையையாய் பதிய வைக்க...

உன் கண்கள் ஏமாற்றினாலும் - நான்
காணாத உன் கால்களின் கவிகளாய்
என்னுடன் பேசிவிட்டுச் செல்லும்
உன் கொலுசுகள் என் தோழியடி...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (27-Jan-17, 10:04 pm)
பார்வை : 149

மேலே