ஜல்லிக்கட்டு

ஜாதி மதம் களைந்து
ஜல்லிக்கட்டுக்காக போராடி...
விளம்பரம் தேடிகளை
வீதி வரை வழியனுப்பி...
வெளிநாட்டு பானங்களை வெளியேற்றி...
வீர முழக்கங்கள் விண்ணை பிளக்க..
மூன்று மாத குழந்தையும்
முந்நூறு தடவை குரல் கொடுக்க...
கரகோஷங்கள் காதை கிழித்தன..
எங்கோ பிறந்தோம்...
எங்கோ வளர்ந்தோம்...
அறிமுகமில்லா தங்கைகளும்...
நானறியாத நண்பர்களும்...
சொந்தமாய் கிடைத்தனர்...
நிலாச்சோறு உண்டதாய் நினைவிலில்லை...
நண்பன் ஊட்டிய நிலாச்சோறு
நெஞ்சிருக்கும் வரை நிலைக்கும்
என்பதில் ஐயமில்லை...
மெத்தையில் வராத நித்திரையும்
வந்தது
நண்பன் மடியில் தலைசாய்க்கையில்...
வேறென்ன வேண்டும் உலகத்திலே..
சொர்க்கத்தில் வாழ்ந்து விட்டேன்..
இது போதும் எனக்கு...
மீதமுள்ள நாள்களை
நிம்மதியாய் தொடர....!!!!

எழுதியவர் : ரஜனி ஆர்த்தி . க (28-Jan-17, 12:10 am)
Tanglish : jallikkattu
பார்வை : 63

மேலே