குடைக்குள் மழை
குடைக்குள் மழையாய்க் காதலர்கள் என்றும்
குதூகலம் நாடிட ஒன்றாகச் சேர்ந்து
தடைகள் தாண்டியே வெற்றியும் பெற்றுத்
தரணியை ஆளுதல் முறையே ! வாழ்வில்
தரமொடு நிலைக்கும் மழைபோல் காதலே !
ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்