இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது எப்படி

மரணம் என்பது தவிர்க்க முடி யாதது.சில மரணங்கள் நம்மை அழவைக்கும் சில மரணங்கள் நமக்கு பயத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத மரணங்கள் நம்மை அழவைப் பதை விட பயத்தை அதிகப்படுத்தும். ஒருவரை சார்ந்து வாழ பழகி கொண்ட நாம் திடீரென அவர் இல்லாமல் போனால் ஒட்டுமொத்தமும் கேள்வி குறியாக இருக்கும். அவருடைய சொத்துகள், கணக்கு விபரங்கள், கடன்கள், இன்ஷூரன்ஸ் திட்டங்கள் என அனைத்தைப் பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். ஆனால் இதுபற்றிய விவரங்கள் தெரியாதவர்களுக்கு மிக கடினமாக இருக்கும். எப்படி இதையெல்லாம் மீட்கப் போகிறோம் என்ற கவலை இருக்கும். இறந்தவர்களின் சொத்துகளை மீட்பது பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொண்டால் கடினமான சூழ்நிலையை சமாளிக்கலாம்.

இறப்பு சான்றிதழ் / சட்ட வாரிசு சான்றிதழ்

இறந்தவர்களுடைய சொத்துகளை மீட்க வங்கி, இன்ஷுரன்ஸ் நிறுவனம், மியூச்சுவல் பண்ட், அரசாங்க நிறு வனங்கள் என எதை அணுக வேண் டும் என்றாலும் நீங்கள் இறப்புச் சான் றிதழைக் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் அவருடைய கணக்கு விவரங்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். தனியான அல்லது இணைந்த கணக்காக உள்ளதா என்பதைப் பற்றி யும் தெரிந்திருக்க வேண்டும். இறந்த வரின் உயில் உங்களிடம் இருந்தால் எளிமையாக சொத்துகளை மாற்றிக் கொள்ள முடியும். உயில் உங்களிடம் இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகி சட்ட வாரிசு சான்றிதழ் பெற வேண்டும்.

இந்த சான்றிதழ்கள் பெற்றபிறகு சொத்துகளின் விவரங்கள், முதலீட்டு விவரங்கள் பற்றி பட்டியல் தயாரித்துக் கொள்ள வேண்டும். சொத்துகள், வங்கி கணக்குகள், டிமேட் கணக்கு விவரங் கள், மியூச்சுவல் பண்ட், பிஎப் முதலீட்டு விவரங்கள், வங்கி லாக்கர் விவரங்கள், கடன் விவரங்கள், இன்ஷூரன்ஸ் விவரங் கள் என அனைத்திற்கும் ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொண்டு கிளைம் செய்ய வேண்டும்.

இறந்தவருக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்னென்ன கடன்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த கடன்களை திருப்பி செலுத்துவதற்கு என்னென்ன சொத்துகள் இருக்கின்றன என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு கடன் வழங்கிய நிறுவனங்களை அணுக வேண்டும். அவர்களிடம் கடன் பற்றிய விவரங்களை வாங்கிய பிறகுதான் எந்த முதலீட்டை வைத்து கடனை திருப்பி செலுத்த முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். உதாரணமாக சில இன்ஷுரன்ஸ் பாலிசிகளை வைத்துக் கொண்டே கடன்களை திருப்பிச் செலுத்திவிட முடியும். இது போன்ற விவரங்களைத் தெளிவாக கேட்டு கொள்ளுங்கள்.

முதலீடுகளை எப்படிக் கையாளுவது?

குறிப்பிட்ட நாட்களுக்குள் இறந்தவ ருடைய மியூச்சுவல் பண்ட், வங்கி கணக்குகளில் செய்துள்ள முதலீடுகளை வேறொரு கணக்குக்கு மாற்றவோ அல்லது முடித்துக் கொள்ளவோ வேண்டும். இதற்கான நடைமுறைகள் பெரும்பாலான நிறுவனங்களில் ஒரே மாதிரியாகத்தான் உள்ளன. இறந்தவ ருடைய கணக்கு வகைகளை பொறுத்து சில நிறுவனங்களில் நடைமுறைகள் வேறாக இருக்கலாம்.

இணைப்பு கணக்காக இருக்கும் பட்சத்தில் இணைப்பில் குறிப்பிடப்பட் டிருக்கும் நபர் உடனடியாக கணக்கை அவர் பெயருக்கு மாற்றிக் கொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் மாற்றிக் கொள்வதற்கு இறந்தவருடைய இறப்புச் சான்றிதழ் மருத்துவ விவரங் களை அளிக்க வேண்டும்.

வங்கி கணக்குகள்

மற்ற முதலீடுகளுக்கு அளித்த விவரங்களைதான் வங்கி கணக்கு களுக்கு அளிக்க வேண்டும். இறந்தவ ருடைய வங்கிக் கணக்கில் மிகப் பெரிய அளவுக்கு தொகை இல்லையெனில் நிறைய ஆவணங்கள் தேவைப்படாது. 15 நாட்களுக்குள்ளேயே பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். எந்தெந்த சேவைகள் இந்த வங்கி கணக்கிலிருந்து செலுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டால் அபராதங்களைத் தவிர்க்கலாம்.

நீண்ட கால டெபாசிட்

பிக்ஸட் டெபாசிட் அல்லது நீண்ட கால பத்திரங்களில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை திரும்பப் பெறுவதோ அல்லது மாற்றிக் கொள்வதோ உங்களுக்கு மிக சாதகமாக இருக்கும். பிக்ஸட் டெபாசிட்டை பொறுத்தவரை எந்தவொரு அபராதக் கட்டணமும் கிடை யாது. வாரிசுதாரர் பிக்ஸட் டெபாசிட்டை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றிக் கொள்ளமுடியும். எப்போது பிக்ஸட் டெபாசிட் செய்யப்பட்டதோ அப்போதி லிருந்தே வட்டி கணக்கிடப்படும்.

- மீரா சிவா

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Jan-17, 10:12 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 178

மேலே