தெரிவதும் தெரியாததும்

தெரிவதும் தெரியாததும்

சுடர்விட்டு எரியும்திரி நுனியின் பின்னே
அடியில்நெய் ஏந்திநிற்கும் அகலும் உண்டு.
படர்ந்துபல கிளைகள்கொண்ட மரத்தின் அடியே
திடமாக அதைநிறுத்தும் வேர்கள் உண்டு.

இடரின்றி வாழ்கின்ற குடும்பத் தடியில்
கடன்பட்டும் காக்கின்ற தந்தை உண்டு.
ஆளாகி அரசாளும் பிள்ளை பின்னே
மாளாது உழைத்தவோர் தாயும் உண்டு.

கொடியேற்றி மின்னுகின்ற கலசம் நிற்றல்
அடித்தளத்தில் புதைந்திருக்கும் கல்லால் அன்றோ?
வானெட்டும் பெரும்புக ழடைந்த பின்னும் -
ஏணியாய் இருந்தவரை மறத்தல் நன்றோ?

வெளியிலே அழகாக வெளிச்சம் போட்டு
பளிங்குபோல் ஒளிர்கின்ற பொருள்கள் அடியில்
ஒளிந்தொண்டிக் கிடக்கின்ற உண்மை உன்டு.
தெளிவோடு அவ்வுண்மை கண்டு உணர்வோம்.

எழுதியவர் : ரமேஷ் (கனித்தோட்டம்) (2-Feb-17, 9:33 am)
பார்வை : 74

சிறந்த கவிதைகள்

மேலே