கரையை தொடாத அலைகள்

தேடிவந்த மாமனவன்
தாவிவரும் வேளையிலே
காத்திருந்த கன்னிமனம்
நெஞ்சமெல்லாம் கலங்குவதேன்
புங்கைவன புன்னகையில் பூத்திருந்த மதுமலரே
பூப்பெய்தும் வேளையிலே
இதழிரண்டும் வாடுவதேன்

சீர்வரிசை இல்லையிங்கே
சிறுக்கி நான் எங்கே போவேன்
ஊர்போற்றும் குணமிருந்தும்
உத்தமியாம் பேர் இருந்தும்
காசில்லா வாழ்க்கையிலே
கருணையோடு கைகொடுத்த தெய்வமது
தேடிவந்தும்
இரக்கமில்லா சாதியெனும் மனிதத்தாலே
என் வாழ்க்கை கரையை தொடாத அலைகள்

எழுதியவர் : சௌம்யா செல்வம் (7-Feb-17, 1:58 pm)
பார்வை : 369

புதிய படைப்புகள்

மேலே