எப்படித்தான் மறைத்தேனோ

நீ அருகில் இல்லாத போது
என்னுள் தோன்றிவிடும்
என்னவென்றே விளக்கமுடியாத
இனிமையான இதமான உணர்வுகள்…
என்னுள் அரும்பிவிடும் புன்னகைகள்…
அளவிட முடியா மகிழ்ச்சி...
எல்லாவற்றையும் எப்படித்தான் மறைத்தேனோ?
நீ என் எதிரில் இருக்கையில்...

எழுதியவர் : சிவராமகிருட்டிணன் (18-Feb-17, 8:14 am)
பார்வை : 331

மேலே