உன் கண்ணிமை நான்

கண்ணெதிரே காட்சியரியும் கருவிழி நீயானால்
காட்சிப்படுத்தும் கண் இமையாய் நானாவேன்..!

உன்னுடை என்றும் கருவெள்ளையாயிற்றே இன்று
நம் மெய்க்காட்ட திறக்கிறேன் தொலைவினில்நானின்று..!

உன்விழி அழகுமறைத்த கோலத்தினை காட்டிடவே
என்னிமை மீதுபூசும் கருப்பினை ஏற்பேனே..!

நீயுறங்க நானென்றும் இமைமூடி தெரிகிறேன்
நானுறங்கி உன்னிடம் நட்சத்திரம் காட்டினேன்..!

எழுதியவர் : ShivMaha (21-Feb-17, 11:32 am)
சேர்த்தது : சிவா
பார்வை : 267

மேலே