காயாத கல்லறை x குமரிபையன்

மனைவி: நான் மரணித்த பின் இன்னொரு திருமணம் முடிக்க எவ்வளவு காலம் எடுப்பீர்? என்று கேட்டாள்.

கணவன்: உன் மண்ணறையின் மண் காயும் வரை என்றான்.

மனைவி: வாக்குத்தர முடியுமா? என்றாள்.

கணவன்: சிரித்துக் கொண்டே தருகிறேன் என்றான்.

சில காலத்தின் பின் மனைவி மரணித்து விடுகிறான்.

கணவன் ஒரு வருடமாக அடக்கம் செய்த இடத்தை பார்க்கிறான் அது காயவே இல்லை.

ஒருநாள் மாலை அவளது மண்ணறை அருகே நின்றிருந்த ஒரு மனிதனைப் பார்த்து: நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான்.

அம் மனிதன்: மரணித்த என் சகோதரியின் வாக்குமூலத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன் என்றான்.

கணவன்: அது என்ன வாக்குமூலம் ?

அம் மனிதன்: இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எனது மண்ணறையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது இறந்து போன என் சகோதரியின் மரணமொழி என்றான்.

*உயிர் வாழும்போதும் மரணித்த பின்பும் பெண்களின் சதி மகத்தானது.*😀

எழுதியவர் : குமரி பையன் (22-Feb-17, 4:35 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 494

சிறந்த நகைச்சுவைகள்

மேலே