சிறகடிக்கும் வயசு

சிறகடிக்கும்​ பறவையாய் சிறுவயசு பருவமது
சிந்தையும்​ அறியாது சிந்திக்கவும் தோன்றாது
புரிந்திடாக்​ காலமது செய்வதறியா இளமையது
புத்துணர்வுப் பொங்கிடும் குறும்புகள் அரும்பிடும்
செய்திடும்​ காரியங்கள் திசைமாறி சென்றாலும்
செய்முறைகள்​ மாறாது செயலிழக்க செய்திடாது
திரும்பிடா​ வாழ்வுமது திகட்டாத நினைவுகளது
தினந்தோறும்​ மலர்ந்திடும் மனதில் மனிதர்க்கு !


​பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Feb-17, 8:53 am)
பார்வை : 326

மேலே