சிறகடிக்கும் வயசு
சிறகடிக்கும் பறவையாய் சிறுவயசு பருவமது
சிந்தையும் அறியாது சிந்திக்கவும் தோன்றாது
புரிந்திடாக் காலமது செய்வதறியா இளமையது
புத்துணர்வுப் பொங்கிடும் குறும்புகள் அரும்பிடும்
செய்திடும் காரியங்கள் திசைமாறி சென்றாலும்
செய்முறைகள் மாறாது செயலிழக்க செய்திடாது
திரும்பிடா வாழ்வுமது திகட்டாத நினைவுகளது
தினந்தோறும் மலர்ந்திடும் மனதில் மனிதர்க்கு !
பழனி குமார்