பறவை நான்

மனிதா! கொஞ்சம் நில்
எனைக் கவனி, பின்பு செல்
உயிர்தொடர் சங்கிலியின்
முக்கிய பிணைப்பு நான்
என்பதை நீ அறியாயோ?!
பழம் தின்று விதை கொணர்ந்து
மரம் வளர்த்தேனே!
நீயோ மரம் கொன்று, மான் கொன்று
இறுதியில் என் இனம் கொல்லத் துடிக்கிறாயே!
இது உனக்கே அடுக்குமா? மானிடனே!
எனக்கு உணவு அளிக்காவிடினும் பரவாயில்லை
எனை உணவிற்காய் அழித்துவிடாதே!
எனை உணவாய் கொள்ளும் முன்
உணர்வு கொள் மனிதா!!!

எழுதியவர் : நிக்கலசன் (14-Mar-17, 10:26 pm)
Tanglish : paravai naan
பார்வை : 119

மேலே