அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மதியெனமுகம் சிவந்திடும்படி நானே
------ மறுமொழிதர மறுத்திடவிலை தானே
பதியெனயுனை நினைவினில்கொளு வேனே
------ பழகிடும்வரைப் பயமினியிலை மானே
கதியெனயுனை கனவிலும்மனம் தேனே
------ கவிதைகள்பல கருத்தினில்சுகந் தானே
விதிவழிவர விரைந்திடும்படி நீயே
----- விழிவழிமொழி சிறந்திடுமெனப் பேசாய் !

சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Mar-17, 3:37 pm)
பார்வை : 50

மேலே