நம்பிக்கை பொய்யானது
நட்பில் காதலை முதலில் சொன்னபோது
நட்பில் காதல் ஏற்று கொள்ள முடியாது என்றாய்
பார்த்து பழகி புரிந்து அதன்படி
நடந்தால் வாழ்கை இனிக்கும்
என்று சொன்ன என் கூற்றையும்
பொய் என்றாய்
இன்று பிரிவதற்காக நீ சொன்ன
காரணங்களில் ஒன்று
நீ என்னை பிரிந்தால் இன்னொரு
இழப்பை அந்த வலியை
தாங்க இயலாது என்று எனக்கு
அதே வலி கொடுத்து பிரிகிறாய்
எல்லாம் பொய்யானது நம் நட்பில்
நான் உன் மீது வைத்த நம்பிக்கையும் சேர்த்து