மனைவியின் கண்ணீர்

(முழு கதையும்)


***காதலித்து திருமணம் செய்த அன்பான ஒருவனின் டைரியில் சில பக்கங்கள் ***

திருமணம் முடிந்து 2 மாதங்கள் வேகமாக நகர்ந்து விட்டது,
கல்யாணத்திற்காக, அதன் பின் தேன்நிலவிற்காக என ஏகப்பட்ட லீவ் எடுத்ததின் விளைவு, இப்போது ஆபீஸ் வேலை அதிகமாகிவிட்டது.

அதிலும் கடந்த இரண்ட வாரமாக ஆன்சைட் க்ளைய்ண்ட் கால் முடித்து உறங்க போவதிற்கு இரவு 12 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்றும் அதுபோல் இரவு லேட்டாக எங்கள் ரூமிற்க்குள் தூங்க சென்றேன்.

அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியை டிஸ்டர்ப் பண்ணாமல் குட் நைட் கிஸ் கொடுக்க அருகில் குனிந்தபோது கவனித்தேன், அவள் கன்னங்களில் கண்ணீர், கன்னத்தை தொட்டுப் பார்த்தேன். அதிலே கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது.

சற்றுநேரத்துக்கு முன்னர்தான் அவள் தூங்கியிருந்தாள் என்று நினைக்கிறேன். ஆனால் கண்ணீர் தூங்கவில்லை.

ஏன் கண்ணீர் விட்டு அழுது தூங்கினாள்? என் மனதில் பல கேள்விக்குறி முளைவிட்டது
"அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன துயரம்?

சொந்தகாரங்க யாராவது ஏதும் திட்டியிருப்பார்களா??

அவளோட friends கூட ஏதும் பிரச்சனையா???

இரவில் லேட்டாக வருவதால்
என்மேல் ஏதும் கோபமாக இருக்குமோ???"

பலகேள்விகளுடனும், குழப்பத்துடனும் நான் உறங்க போனேன்.. அப்படியே உறங்கி போனேன்.

மறுநாள் அதிகாலையில் எழுந்து 'பெட் காபி'யுடன் என்னை எழுப்பினாள்.

வழமைபோல் பளீச்சென்ற அவளது புன்னகை பூத்த முகம்,
இரவில் அழுதத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை .....

காபி அருந்தியபடியே அவளிடம் நைசாக கேட்டேன் ஏன் இரவில் அழுதிருந்தாள் என்று....

'அப்படி ஒன்றும் இல்லை, அழவே இல்லை' என்று சாதித்துவிட்டாள். (அழுத்தக்காரி...!)
என் காதல் மனைவிக்கு என்னிடம் கூட பகிர்ந்துக்கொள்ள முடியாத துயரம் அவளை வாட்டுகிறது என்பது என் நெஞ்சை பிசைந்தது.

இருவருடைய குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன்
விமர்சையாக எங்கள் திருமணம் நடந்தது, நாங்க ஆசைப்பட்ட மணவாழ்க்கை அழகாக ஆரம்பித்திருக்கும் போது, அவளுக்கு கண்ணீர் விடும் அளவிற்கு என்ன மனக்கஷ்டம்????

யோசனையுடன் குளியல் அறைக்குள் சென்றேன், அங்கு நின்றபடி மெதுவாக அவளை பார்த்தேன்...

அவள் பெட்ரூம் கண்ணாடி ஜன்னலில் இரவு பெய்த மழை துளியின் ஈரத்தில் ஏதோ கிறுக்கி கொண்டிருந்தாள் விரல் நுனியால்... வெளியே எங்கோ பார்த்தபடி..

நான் குளியல் அறையில் இருந்து வெளியில் வரும்போது, நான் குடித்து முடித்திருந்த காபி கப்புடன் படுக்கை அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

நான் ஈர தலையை துவற்றியவனாக மெதுவாக ஜன்னல் பக்கம் சென்று அவள் எழுதிய வார்த்தையை படித்தேன்... ... ...

"அப்பா"

மழை துளியின் ஈரத்தில் "அப்பா " என்று எழுதியிருந்தாள்,
சூரிய கதிர்பட மெது மெதுவாக அந்த எழுத்துக்கள் மறைந்து அவள் கண்ணீருக்கான காரணத்தை எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தது!

உறுத்திய இதயத்தில் ஒருமுடிவோடு நான் சாப்பிட மேசை முன்னமர்ந்தேன்.

அவளுக்கு பிடித்த பாடலை முணு முணுத்தபடி காலை டிபன் பரிமாறினாள், நாங்கள் காதலித்த நாட்களில் விளையாட்டாக அவள் பாடுவதை கிண்டல் அடித்து விட்டேன், அதிலிருந்து நான் எவ்வளவு கெஞ்சினாலும் என் முன் சத்தமாக பாடவே மாட்டாள், ரோஷக்காரி !

Office க்கு செல்லும் என்னை வழியனுப்ப வாசல்வரை
என் laptop bag யை தூக்கிக்கொண்டு வந்தவளிடம்...

"ஒரு வாரத்திற்கு தேவையான ட்ரஸ் நம்ம இரண்டு பேருக்கும் பேக் பண்ணி வைச்சுடு ..... இன்னைக்கு நைட் நாம வெளியூர் கிளம்பறோம்... "

"ஒரு வாரமா?.....எங்க போறோம்?"

"அது evening office ல இருந்து வந்து சொல்றேன்... "

"Office trip ஆ?.....என்னையும் உங்க கூட கூட்டிட்டு போறீங்களா??"

"இல்ல...."

"அப்போ எங்க போறோம் நாம ......"

"ஏன் இவ்வளவு கேள்வி கேட்கிறே ? சும்மா ஒரு வெளியூர் trip அடிச்சுட்டு வாரோம் அவ்வளவுதான் ஓகே..."

"இல்ல ஹனி மூனும் போய்ட்டு வந்துட்டோம்..... உங்க ஆபீஸ்'ல வேற உங்களுக்கு ரொம்ப வொர்க், Office trip பும் இல்லேணு சொல்றீங்க..அதான் எங்கே திடீர்னு travel பண்றோம்னு ...."

"அதான் evening சொல்றேன்னு சொல்றேன்ல அதுவர பொறும இல்லையா "

(Suspense ஓடவே
இரு ........என்கிட்ட கூட சொல்லாம தனியா அழு அழுன்னு அழுவியா நீ ? My Mind Voice)

"புஜ்ஜு evening சொல்றதை இப்பவே சொன்னாதான் என்னவாம்??"

(அடிப்பாவி புஜ்ஜு ன்னு செல்லம் கொஞ்சி நைஸா கேட்கிறியா?)

"Evening வரைக்கும் வெயிட் பண்ணுமா பட்டு குட்டி"
நான் பதிலுக்கு கொஞ்சினதும், ஹையோ நம்ம try வேஸ்ட் ஆ போச்சுதேன்னு அவ மனசுல நினைக்கிறது அவ கண்ணுல தெரிஞ்சுது,

அதை ரசித்துக்கொண்டே அவள் நெற்றி உச்சியில் முத்தமிட்டு நகர்ந்த என்னை என் ஷர்ட் காலர் பிடித்திழுத்து ஒரு 'இச்' கொடுத்து அனுப்பினாள்...

மாலை...
சொன்னபடி ஒருவார லீவுடன் வீட்டுக்கு வந்தேன். ம்ஹூம்.. அவள் எதுவும் கேட்கவில்லை..

நான் குளித்து ஆடைமாற்றி சிற்றுண்டி அருந்திவிட்டு புறப்பட தயாரானேன்.

'ஒரு வார டிரஸ் எடுத்திருக்கால்லே. '

"ஆமாங்க .. உங்க past brush.. shaving set.. cream.. எல்லாம் எடுத்தாச்சு "

"Gas connection .. water tape..எல்லாம் மூடீயாச்சானு ஒருவாட்டி செக் பண்ணிக்கோ."

"சரிங்க.....

"என்ன ஒரு ரோசகார புள்ள.. எங்கே போறம்னு மாலைல வந்தபின் என்னிடம் கேட்கவேயில்லை."

அந்த இரவு தொடங்கும் நேரம் வாயிற்கதவை பூட்டி கொண்டு
இருவரும் புறப்படுகிறோம்...

அவள் விழி ஓரத்தில் கண்ணீர் துளி ததும்பி நின்றது...
நா தழு தழுக்க.....சின்ன விசும்பலுடன்...."ரெம்ப தேங்க்ஸ்ங்க ......." என்றபடி என் தோளில் சாய்ந்தாள்...

"எதுக்குடி பட்டு ...."

"ஹும் ......நாம..........இப்போ எங்கப்பா வீட்டுக்குத்தான போறோம் சொல்லுங்க...??"

"எப்படி.....? எப்படி ...தெரியும்டி? எப்படி கண்டுபிடிச்சே உண்மய சொல்லுடி"

" Possessiveness கலந்த காதலை 2 மாதத்திற்கு அப்பறமா உங்க கண்ணுல காலைல நான் பார்த்தேன்...... கண்டிப்பா அதுக்கு என் அப்பா மட்டும் தான் காரணம்னு எனக்கு தெரியும் "

"அடிகள்ளி........."

'இறைவா !
அப்பா மேல் பாசம் பொழியும் ஒரு மகளை எனக்கும் சீக்கிரம் வரமாக கொடு' என்ற வேண்டுதலோடு இனிதான அந்த இரவில் அவளோடு பயணிக்க காரின் கதவை திறந்தேன். !!

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
நட்புடன் குமரி

எழுதியவர் : முகநூல் (25-Mar-17, 12:16 am)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 2782

மேலே